2 கோடி பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை கைது !

Date:

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 350 கிராம் கொக்கெய்னுடன் மெசிடோனியா நாட்டு பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் இன்று (13) கைது செய்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான நடத்தை காரணமாக பிரேசில் நாட்டிலிருந்து வருகைதந்த மெசிடோனிய பிரஜையை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, ​​அவர் வைத்திருந்த பையில் கொக்கெய்ன் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 54 வயதுடைய சந்தேகநபர் இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவை எனவும் சந்தேக நபருடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...