3ஆவது மாடியிலிருந்து விழுந்து மீனவர் மரணம்!

Date:

மொரட்டுவ-சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்தனர்.

சயுருபுர வீட்டுத் தொகுதியின் மூன்றாவது மாடியில் வசித்து வந்த ரசிக சம்பத் மார்ட்டின் (24) என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி மற்றும் பெற்றோரிடமிருந்து கிடைத்த தகவலின்படி, உயிரிழந்தவர் அதிகாலை 2 மணியளவில் மரண இல்லத்திற்குச் செல்வதற்காக கூறிவிட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் இரவில் வீட்டிற்கு வரும்போது வீட்டிலுள்ளவர்களின் நித்திரைக்கு பாதகம் ஏற்படாதவாறு, மூன்றாவது மாடியின் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த தினம் வழக்கம் போல் ஜன்னல் வழியாக வீட்டுக்கு வரும்போது விபத்துக்குள்ளானாரா அல்லது அப்படி ஏதும் இல்லையென்றால் கொலையா என்பது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...