ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 820 டன் யூரியா உரம், இலங்கையின் சிறு நெல் விவசாயிகளுக்கு விநியோகிக்கும் நோக்கில் இன்று விவசாய அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 72,200க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த பசளை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட நெல் உற்பத்தியாளர்களிடையே ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவ மூலோபாயத்தை அறிமுகப்படுத்துவதற்கு இது ஆதரவளிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.