இலங்கையின் இளம் தாய் எக்டோபிக் கர்ப்பத்தின் பின்னர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்

Date:

இலங்கையில் பெண் ஒருவர் அரிய முழு கால எக்டோபிக் கர்ப்பத்தின் பின்னர் சிசேரியன் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கொழும்பில் உள்ள டி சொய்சா பெண்களுக்கான வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினர் சிசேரியன் அறுவை சிகிச்சையின் பின்னர் குழந்தையை வெற்றிகரமாக பிரசவிக்கச் செய்துள்ளனர்.

கருவுற்ற முட்டை கருப்பைச் சுவருக்கு வெளியே ஃபலோபியன் குழாய்கள், கருப்பை வாய் போன்றவற்றில் தன்னை இணைத்துக் கொள்கிறது. இது நிகழும்போது, அது எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது.

அடிவயிற்று கர்ப்பம் அல்லது எக்டோபிக் கர்ப்பம் மிகவும் அரிதாகவே நிகழ்வதாகவும், புள்ளிவிவரங்களின்படி 30,000 கர்ப்பங்களில் ஒன்று மட்டுமே இவ்வாறு நிகழ்கிறது என்றும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியொருவர் சில வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் கருப்பைக்கு வெளியே கரு வளர்ந்திருப்பதை வைத்தியர்கள் அவதானித்தனர்.

குறித்த இளம் தாயை திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதித்த போது, அவரது கரு 28 வாரங்களாக இருந்தது.

இந்தநிலையில், இது மிகவும் அரிதான கர்ப்பம் என்பதால், அவரை கொழும்பிலுள்ள டி சொய்சா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தனர்.

இதனையடுத்து அவர் டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரு வளரும் வரை 34 வாரங்கள் வரை அவரை கடுமையான மருத்துவ கண்காணிப்பில் வைத்தியர்கள் வைத்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...