யாழ். வைத்தியசாலையில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

Date:

யாழ். போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெறும் நோயாளர்களை பார்க்க வரும் உறவினர்கள் போதை மாத்திரைகள், மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களை எடுத்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டீ.சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களின் பயணப் பைகளை சோதனையிடுகையிலேயே இவ்வாறு போதைப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வைத்தியசாலைக்குள் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் இப்பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 3 மதுபான போத்தல்கள்;, ஒருதொகை போதைப்பொருள் மற்றும் போதை கலந்த வெற்றிலை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...