ஹட்டன் திருச்சிலுவை ஆலய பங்கின் பாதுகாவலியாம் புனித அன்னம்மாளின் வருடாந்த திருவிழா கடந்த 16.07.2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் பீரீஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமானது.
இந்நிலையில், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நவநாள் திருப்பலிகள் இடம்பெற்றன.
இதையடுத்து நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆராதனை மாலை 5.00 மணிக்கு கண்டி மறை மாவட்ட குரு முதல்வர் அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்தந்தை எல்வின் பீட்டர் பெர்னாண்டோ அடிகளார் தலைமையில் இடம் பெற்றது.
இன்று 23.07.2024 ஞாயிற்றுக்கிழமை திருவிழா கூட்டுத் திருப்பலியானது கொழும்பு மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி அண்டன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக் கொடுக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து புனித அன்னம்மாளின் திருச்சுரூப பவனி நடைபெறும்.