சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான நாடாளுமன்ற விவாதத்துக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 முதல் 28 வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
குறித்த விவாதத்தின் மீதான வாக்கெடுப்பை எதிர்வரும் 28 ஆம் திகதி நடத்துவதற்கும் இன்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.