எம்.எஸ். டோனி எங்கள் நாட்டிற்காக விளையாடினால்… சிஎஸ்கே-வை கிண்டல் செய்த ஐஸ்லாந்து

Date:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடைசி நேரத்தில் களம் இறங்கி வரும் எம்எஸ் டோனி அபாரமாக விளையாடி வருகிறார். எம்.எஸ். டோனி நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவாரா? என ரசிகர்கள் ஏங்கும் நிலையில், குறைந்தபட்சம் 10 பந்துகளை சந்திக்கும் நிலையில்தான் களம் இறங்குகிறார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் எல்எஸ்ஜி அணிக்கெதிராக கடைசியில் இறங்கி அசத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கடைசி ஓவரில் 4 பந்துகளை சந்தித்த அவர், முதல் மூன்று பந்துகளில் தொடர்ச்சியாக சிக்ஸ் விளாசினார்.

நேற்று எல்எஸ்ஜி அணிக்கெதிராக கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசினார். மொத்தமாக 9 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் குவித்தார்.

ஒரு கட்டத்தில் சிஎஸ்கே 90 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. அப்போது டோனி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் களம் இறங்கவில்லை.

இந்த நிலையில் ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டு, டோனியை முன்வரிசையில் களம் இறக்குவதில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க செய்தில் “எம்.எஸ். டோனி எங்கள் அணிக்காக விளையாடினால் அவர் போன்ற வீரரை நாங்கள் 8-வது இடத்திற்கு முன்னதாக களம் இறக்குவோம். இளம் வீரர் போன்று தோன்று அவர், சிஎஸ்கே அணியில் அவரின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை பெறவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

விடாமுயற்சியை அடுத்து நடிகர் அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்...

தகாத உறவை கண்டித்தால் சிக்கன் ரைஸில் விஷம்

நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல்...

டி20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

ஐ.சி.சி.-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்க...

ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்த மும்பை- 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா...