தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடிதம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் சபாநாயகருடன் கலந்துரையாடல்
தேர்தலுக்கான நிதியை வழங்குகின்றமை தொடர்பாக சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து விவாதிப்பதற்காக உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு […]