இஸ்ரேலில் காரை கொண்டு மக்கள் மீது மோதிய பயங்கரவாதி

Date:

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் சார்லஸ் குளோர் பூங்கா பகுதியில் கியாஸ் நிரப்பும் நிலையம் அருகே பயங்கரவாதி ஒருவன் தனது காரை கொண்டு மக்களின் மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளான்.

இந்த தகவல் அறிந்ததும், டெல் அவிவ் நகர நகராட்சி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். பொதுமக்களின் சத்தம் கேட்டு அருகேயே இருந்த அதிகாரிகள் உதவிக்கு ஓடியுள்ளனர்.

அந்த காரின் ஓட்டுநர், காரில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுக்க முயற்சித்து உள்ளான். உடனடியாக, போலீசார் மற்றும் ஆய்வாளர்கள் அந்த கார் ஓட்டுநரை சுட்டு வீழ்த்தி உள்ளனர்.

பயங்கரவாதியின் தாக்குதலில், குடிமக்களில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 6 பேர் காயமடைந்து உள்ளனர். டெல் அவிவ் நகர காவல் அதிகாரி அமிசாய் ஈஷெட் கூறும்போது, சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி, சைக்கிள் நிறுத்திய பகுதியில், மக்கள் பலரை இலக்காக கொண்டு, தெளிவான திட்டத்துடன் மோதி, விபத்து ஏற்படுத்தி உள்ளான்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பின்னணி, தாக்குதலுக்கான நோக்கம், தடயம் உள்ளிட்டவற்றை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என அவர் கூறியுள்ளார். தாக்குதலுக்கு ஆளானவர்கள் அனைவரும் சுற்றுலாவாசிகள் என கூறப்படுகிறது.

இதில் பலியான நபருக்கு 30 வயது இருக்க கூடும் என மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த பகுதியை மூடி, போலீசார் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளனர். தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈஷெட் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...