ஓடிடியில் தங்கலான் படம் இன்னும் ரிலீஸ் ஆகாதது ஏன்..?

Date:

தி கோட் படத்திற்கு முன்னதாகவே தங்கலான் ரிலீசான நிலையில் ஓடிடியில் வெளியாக தாமதம் ஆகி வருவதற்கு பல காரணங்களை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் முன்னணி கேரக்டரில் நடித்து ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியான தங்கலான் திரைப்படம் ஓடிடியில் இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் கருத்துகள் கவனம் பெற்று வருகின்றன. விரைவில் இந்த படம் ஓடிடியில் வெளியாக வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சூப்பர் ஹிட்டானது.

விஜய் நடித்த தி கோட் திரைப்படம் கடந்த மாதம் 5 ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் நேற்று முன்தினம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

தி கோட் படத்திற்கு முன்னதாகவே தங்கலான் தியேட்டர்களில் வெளிவந்த நிலையில் ஓடிடியில் வெளியாக தாமதம் ஆகி வருவதற்கு பல காரணங்களை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பின்வரும் கருத்துக்களை கூறியுள்ளனர்.

ஓடிடி தளங்கள் எதிர்பார்க்கும் விதிகளை மீறும் வகையில் தங்கலான் படத்தில் காட்சி அமைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும்படி காட்சிகள் இருந்தால், பின்னால் பிரச்னை ஏற்படும் என்பதால் அதுபோன்ற காட்சிகளை நீக்குவது நல்லது என ஓடிடி நிறுவனம் கருதுவதாக தெரிகிறது.

தங்கலான் படத்தில் மாட்டு இறைச்சி சாப்பிடும் காட்சிகள் மற்றும் எருமை மாட்டை அடித்து சாப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த காரணங்களுக்காக தங்கலான் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுவதில் தாமதம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம்

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ள...

மீண்டும் பியூமியிடம் வாக்குமூலம் பதிவு!

பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும்...

பதவி விலகலை அறிவித்தார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்...

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...