மாலபே, தலஹேன, ஹல்பராவ பிரதேசத்தில் ஆறு வயது சிறுவன் கண்ணாடி போத்தலுடன் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்ணாடி போத்தலுடன் சிறுவன் கீழே விழுந்துள்ளதாகவும், போத்தல் உடைந்து சிறுவனின் உடலில் குத்தியதால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லேரியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் உடலின் அருகில் வளர்ப்பு நாய்க்குட்டி படுத்திருந்த உருக்கமான சம்பவமும் நிகழ்ந்தது