காட்டுயானைகள் மோதி பலி – தொடரூந்து தடம்புரண்டது!

Date:

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு நேர அஞ்சல் தொடரூந்தில், நேற்று  8 இரவு ஹபரணை – ஹதரஸ்கொட்டுவ பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மோதி உயிரிழந்துள்ளன.

இதனால் குறித்த தொடரூந்து தடம்புரண்டுள்ளதாக ஹபரணை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஹுருலு சூழலியல் பூங்காவில் இருந்து வந்த காட்டு யானைகளே தொடரூந்தில் மோதியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடரூந்து தடம் புரண்ட போதிலும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடரூந்து மார்க்கத்தை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...