பதுளை கும்பல்வெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
எரிபொருள் ஊர்தி ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியோரத்தில் அமைந்திருந்த உணவகம் மற்றும் வீடுகள் மீது மோதுண்டதில் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் தெம்மோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.