நானுஓயா- ராகலை வரையான ஆங்கிலேயர் கால தொடரூந்து பாதையை புனரமைக்க திட்டம்

Date:

நானுஓயாவில் இருந்து நுவரெலியா வழியாக ராகலை வரையான பிரித்தானிய கால தொடரூந்து பாதையை புனரமைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை நாடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

31 கிலோமீற்றர் நீளமுள்ள இந்த குறுகிய தொடரூந்து பாதை, ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.

இருப்பினும், இது வணிக ரீதியாக நம்பகத்தன்மை இல்லாததால், பின்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களால் பாவனையிலிருந்து நீக்கப்பட்டது.

கட்டமைத்தல், இயக்குதல், இடமாற்றம் மாதிரியின் கீழ் இந்த பாதையை புனரமைக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

உலகின் ஆறாவது மிக உயரமான தொடரூந்து நிலையமாக கருதப்படும் கந்தபொல தொடரூந்து நிலையம் இந்த தொடரூந்து பாதையில் அமைந்துள்ளது என்றார்.

இந்த தொடரூந்து பாதையை புனரமைப்பதன் ஊடாக சுற்றுலா வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...