கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.
கடல்சால் சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம், காவல்துறை, ராணுவம் என்பன இணைந்து குறித்த சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.
குருநகர் கடற்கரையை அண்டிய பகுதிகளில் அதிகளவான கழிவுகள் சேர்ந்துள்ளமையால் சூழலுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் என்பதனை கருத்தில் கொண்டு இன்றைய தினம் குறித்த பகுதிகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டன.
சுத்திகரிப்பு பணியில் இராணுவம், காவல்துறை, இராணுவ தளபதி யாப்பான மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர், அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.