போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான வாலிபருக்கு தூக்கு

Date:

போதைப்பொருள் கடத்தல் என்பது சில நாடுகளில் மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. அதில் சிங்கப்பூரும் ஒன்றாகும். அங்கு 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தினால் மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 1.5 கிலோ கஞ்சா கடத்திய 35 வயது வாலிபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தூக்கு தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி அவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதனை சிங்கப்பூர் கோர்ட்டு நிராகரித்தது. இதனையடுத்து அந்த வாலிபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதேபோல் கடந்த மாதம் 26-ம் திகதி தமிழகத்தை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒரு மாதத்துக்குள் அங்கு மற்றொரு வாலிபர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...