மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி 17 பேர் காயம்

Date:

காட்பாடியை அடுத்த அக்ராவரத்தில் நேற்று மாடுவிடும் திருவிழா நடந்தது. இந்த விழாவில் காட்பாடி, லத்தேரி, வேலூர், சித்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டுவரப்பட்டன. வேலூர் உதவி கலெக்டர் கவிதா தலைமை தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். தொடக்கமாக பாதுகாப்பு உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

அதனை தொடர்ந்து கால்நடைத்துறையினர் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 170 மாடுகள் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக வீதியில் அவிழ்த்துவிடப்பட்டன. அந்த காளைகள் சீறிப்பாய்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைந்தது. அப்போது, வீதியின் இருபுறமும் திரண்டிருந்த இளைஞர்கள் மாடுகளை உற்சாகப்படுத்தினர்.

விழாவில் காளைகள் முட்டிதில் 17 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்ட முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குறிப்பிட்ட இலக்கினை குறைந்த விநாடியில் கடந்த மாடுகளுகளின் உரிமையாளர்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டது.  முதல் பரிசு ரூ.70 ஆயிரம், 2வது பரிசு ரூ.60 ஆயிரம் என மொத்தம் 72 பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காட்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...