யாழில் சிறுவர் இல்லம் முற்றுகை

Date:

யாழ்ப்பாணம் – இருபாலை பகுதியில் அனுமதியின்றி நடத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்து 17 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் ராஜேந்திரம் குருபரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அவர்கள், சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஊடாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உரிய வகையிலான பராமரிப்பு மற்றும் வசதிகள் அந்த சிறுவர் இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து குறித்த சிறுவர் நிலையம் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் ராஜேந்திரம் குருபரன் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...