வாகன விபத்துக்களால் 1,043 பேர் உயிரிழப்பு!

Date:

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்கள் காரணமாக ஆயிரத்து 43 பேர் உயிரிழந்தனர்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, வாகன மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹப்புகொட இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

992 வாகன விபத்துக்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் 23 ஆயிரத்து 704 வாகனங்கள் பதிவாகியிருந்ததுடன் 2 ஆயிரத்து 370 பேர் குறித்த விபத்துக்களில் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு வாகன விபத்துக்களில் வீழ்ச்சி காணப்பட்ட போதிலும் தற்போது வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வாகன மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...