இன்று (24) மாலை முதல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு (BIA) வரும் வெளிநாட்டு பயணிகளுக்காக பிரத்தியேக குடிவரவு கருமபீடங்கள் இயங்கவுள்ளன.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்திக் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் இந்த பிரத்தியேக கருமபீடங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.