கிரீமியாவில் ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அழிப்பு-

Date:

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய கருங்கடல் பகுதியில் செவாஸ்டோபோல் கிரீமியா துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இந்த துறைமுகப்பகுதியை ரஷியா தனது வான் வெளி தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகிறது. தொலைவில் இருந்து உக்ரைன் இலக்குகள் நோக்கி ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

இந்நிலையில் கிரீமியாவில் ரஷியாவின் 2 போர்க்கப்பல்களை தாக்கி வான் பாதுகாப்பு அமைப்பை அழித்துவிட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து உள்ளது. ஆனால் ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதிபடுத்தவில்லை. 5 கடல் டிரோன்கள் மூலம் சம்பந்தப்பட்ட தாக்குதலை முறியடித்துவிட்டதாக ரஷியா தெரிவித்து இருக்கிறது. இந்த தாக்குதலில் சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பதவி விலகலை அறிவித்தார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்...

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...