கொழும்பு, புறநகர் பகுதிகளில் திடீர் மின்தடை!

Date:

கொழும்பின் பல பகுதிகளிலும், அதனை அண்மித்த புறநகர் பகுதிகளிலும் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவையில் உள்ள 132 கிலோ வோட் உப மின்நிலையம் மற்றும் மருதானையில் உள்ள 220 கிலோ வோட் உப மின்நிலையம் என்பன திடீரென செயலிழந்தமையினால் இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 ஆகிய பகுதிகளிலும், கொலன்னாவை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

நிலைமையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...