சராசரி ஊழியரை விட 800 மடங்கு அதிக சம்பளம்…

Date:

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, கடந்த ஆண்டில் மட்டும் 1,854 கோடி ரூபாய் ஊதியமாக பெற்றுள்ளார்.

தமிழக வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, உலகின் பிரபல தேடுதளமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். அண்மையில் ஆல்பபெட் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் தான், சுந்தர் பிச்சையின் ஆண்டு ஊதியம் 1,854 கோடி ரூபாய் என்பதும், அதன்படி அவர் ஒவ்வொரு மாதம் சராசரியாக 154 கோடி ரூபாய் ஊதியமாக பெற்ற தகவலும் வெளியாகியுள்ளது. சுந்தர் பிச்சையின் ஊதியம், அந்நிறுவனத்தில் பணியாற்றும் சராசரி ஊழியரை விட 800 மடங்கு அதிகமாகும்.

தனது ஊதியத்தில் 1,788 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக சுந்தர் பிச்சை பெற்றுள்ளார். அதாவது நிறுவனத்தின் இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததற்காக இந்த தொகையானது வழங்கப்பட்டுள்ளது. நிதிச்சுமையை குறைப்பதற்காக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட சூழலில், சுந்தர் பிச்சைக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ள பெருந்தொகை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...