சூடானில் 3500 இந்தியர்கள் சிக்கி உள்ளனர் வெளியுறவுத்துறை தகவல்

Date:

உள்நாட்டு சண்டை மூண்டுள்ள சூடானில் இந்தியர்கள் சுமார் 3,500 பேரும், இந்திய வம்சாவளியினர் 1,000 பேரும் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சூடானின் நிலைமையை இந்திய அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்காக 3வது கடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ் தர்காஷ், சூடான் துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சவூதி அரேபியா இதுவரை இந்தியர்களை வெளியேற்றுவதற்கு வழங்கிய ஆதரவிற்காக இந்தியா “மிகவும் நன்றியுடையதாக இருக்கும் ” மற்றும் சூடானில் உள்ள தனது குடிமக்களுக்கு உதவ செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது என கூறினார்.

சூடான் ராணுவமும் துணை ராணுவப்படையினரும் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து, ‘ஆபரேஷன் காவிரி’ திட்டத்தின் கீழ் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
சூடானில் இருந்து இதுவரை 670 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகர் வழியாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய மந்திரி ஜெய்சங்கர் சூடான் நிலைமை குறித்து இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ்சுடன் விவாதித்தார்

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...