சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது
வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 8-ம் திகதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைகால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.