இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழரசுகட்சியின் இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.
இதன்போது, தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை மற்றும் தீர்வு தொடர்பான விடயங்களை குறித்த கடிதத்தில் உள்ளடக்கவிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.