தலைப்பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

Date:

ஹிஜ்ரி 1444 புனித ஸவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மாலை மஹ்ரிபு தொழுகைக்குப் பின்னர் பிறைக் குழுத் தலைவர் மௌலவி அஸ் ஸெய்க் ஹிஸாம் (பத்தாஹி) தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் தலைப்பிறை தென்பட்டதால் இன்றுடன் புனித ரமழானை 29 ஆக பூர்த்தி செய்து, நாளை சனிக்கிழமை புனித நோன்புப் பெருநாளை இலங்கை வாழ் முஸ்லிம்களை கொண்டாடுமாறு பிறைக்குழு ஏகமனதாக அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழு, அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா பிரதிநிதிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், வளிமண்டலத் திணைக்கள பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகள், மேமன் சங்கப் பிரதி நிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...