தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ரஷ்ய பிரஜை காயம்

Date:

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பகுதியில் இன்று (மார்ச் 15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ரஷ்ய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த வெளிநாட்டவர் பயணித்த கார், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, லொறி ஒன்றின் பின்னால் மோதியுள்ளது. குறித்த கார் பின்னதுவ நுழைவாயிலில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை தொடர்ந்து காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்தையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் காருக்குள் சிக்கியிருந்த ரஷ்ய பிரஜையை மீட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...