கொழும்பில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று மேற்கொள்ளப்பட்ட பாரிய போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு, பொரளை சஹஸ்புரவுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க இவ்வாறு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சுயாதீன ஊடகவியலாளர் தரிந்து உடனுவர உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.