நானுஓயா- ராகலை வரையான ஆங்கிலேயர் கால தொடரூந்து பாதையை புனரமைக்க திட்டம்

Date:

நானுஓயாவில் இருந்து நுவரெலியா வழியாக ராகலை வரையான பிரித்தானிய கால தொடரூந்து பாதையை புனரமைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை நாடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

31 கிலோமீற்றர் நீளமுள்ள இந்த குறுகிய தொடரூந்து பாதை, ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.

இருப்பினும், இது வணிக ரீதியாக நம்பகத்தன்மை இல்லாததால், பின்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களால் பாவனையிலிருந்து நீக்கப்பட்டது.

கட்டமைத்தல், இயக்குதல், இடமாற்றம் மாதிரியின் கீழ் இந்த பாதையை புனரமைக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

உலகின் ஆறாவது மிக உயரமான தொடரூந்து நிலையமாக கருதப்படும் கந்தபொல தொடரூந்து நிலையம் இந்த தொடரூந்து பாதையில் அமைந்துள்ளது என்றார்.

இந்த தொடரூந்து பாதையை புனரமைப்பதன் ஊடாக சுற்றுலா வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...