பாகிஸ்தானில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Date:

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக அந்த நாட்டின் துறைமுக நகரமான கராச்சியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக அந்த வழியில் வந்த 2 மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி, சோதனையிட முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் இருந்த 3 பயங்கரவாதிகள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டனர். இதற்கு பதிலடியாக போலீசாரும் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் 5 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...