பேருந்து – பாரவூர்தியில் மோதுண்டு கொடிகாமம் காவல்துறை உத்தியோகத்தர் பலி!

Date:

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் கொடிகாமம் காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் பயணித்த உத்தியோகத்தரை பின்னால் வந்த இலங்கை பேருந்து ஒன்று மோதியதோடு, எதிரில்வந்த பாரவூர்தியொன்றும் குறித்த உந்துருளியை மோதியதாலும் இந்த விபத்து சம்பவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருந்து மற்றும் பாரவூர்தியின் சாரதிகளை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...