மனித உடல் எச்சங்களுடன் கிடந்த 45 பைகள் மெக்சிகோவில் பெரும் பரபரப்பு

Date:

மெக்கோவின் மேற்கு மாகாணமான ஜாலிஸ்கோவில்(Jalisco) உள்ள பள்ளத்தாக்கில் மனித உடல் எச்சங்கள் அடைக்கப்பட்ட 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட 45 பைகளில் ஆண், பெண் ஆகிய இருவர்களது மனித உடல் பாகங்களும் இருந்ததாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை தொழில்துறை மையமான குவாடலஜாராவின்(Guadalajara) புறநகர் பகுதியான ஐபோபன்(Zapopan) நகராட்சியில் உள்ள 40 மீட்டர் பள்ளத்தாக்கில் இந்த பயங்கரமான கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 20 திகதி காணாமல் போன 30 வயதிற்குட்பட்ட 2 பெண்கள் மற்றும் 5 ஆண்களை தேடும் போது மனித உடல்கள் அடைக்கப்பட்ட 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன அனைவர் குறித்து பொலிஸாருக்கு தனித்தனியாக புகார்கள் வந்துள்ளது, ஆனால் காணாமல் போன 7 பேரும் ஒரே கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது விசாரணையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கால் சென்டர் நிறுவனம் அமைந்துள்ள அதே பகுதியில் தான் மனித உடல் பாக எச்சங்கள் அடைக்கப்பட்ட 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தடயவியல் நிபுணர்கள் இன்னும் உடல் பாகங்கள் யாருடையது என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் கால் சென்டர் நிறுவனம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரலாம் என தெரியவந்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...