யாழில் சிறுவர் இல்லம் முற்றுகை

Date:

யாழ்ப்பாணம் – இருபாலை பகுதியில் அனுமதியின்றி நடத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்து 17 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் ராஜேந்திரம் குருபரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அவர்கள், சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஊடாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உரிய வகையிலான பராமரிப்பு மற்றும் வசதிகள் அந்த சிறுவர் இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து குறித்த சிறுவர் நிலையம் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் ராஜேந்திரம் குருபரன் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...