வேடிக்கையான செயற்பாடு சோகமானதாக மாற இடமளியாதீர்கள்

Date:

அண்மைக்காலமாக பல வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகளால் வீதியில் செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்ய முடிவதில்லை.

இதனைக் கருத்திற்கொண்டு, குறிப்பாக பெற்றோர்கள் பாடசாலை மாணவர்களிடம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த விடுமுறை காலத்தில் மது அருந்திவிட்டோ மிக வேகமாகவோ வாகனம் செலுத்த வேண்டாம்.

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் உங்களுக்கும், வீதியில் செல்பவர்களுக்கும், வாகனத்தில் உள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும்.

விபத்து ஏற்பட்டால், உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படலாம். இந்த பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்கள்.

ஆனால் வேடிக்கையானது கடைசியில் சோகமாக மாறக்கூடாது என்பதை நினைவூட்டுகிறேன்.

வீதியில் பயணிக்கும் போது, கவனமாக பயணிக்க வேண்டும். விபத்துகளைத் தவிர்க்க அவதான இருங்கள்” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...