ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண்கள் செய்த காரியம் !

Date:

பெண் விமானிகள் மற்றும் பெண்களை மாத்திரம் கொண்ட விமானக் குழு உறுப்பினர்களுடன் இந்தியாவின் திருச்சிக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானமொன்றை அனுப்பியது

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இன்று (08) காலை இவ்வாறு விமானமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

ஏ-320 எயார்பஸ் ரக விமானம் அனுப்பப்பட்டதுடன், கெப்டன் சாமிக்க ரூபசிங்க பிரதான விமானியாகவும், பிமாலி ஜீவந்தர துணை விமானியாக இருந்தனர்.

இது தவிர, விமான பணியாளர்கள் என 05 பெண் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அவர்களில் விமான நடவடிக்கைகளின் பிரதானி ரோஷனி திஸாநாயக்க, கெபின் மேற்பார்வையாளர் உபுலி வர்ணகுல, விமானப் பணிப்பெண் லக்மினி திஸாநாயக்க, ஜெயகலனி கின்சன் மற்றும் ஹர்ஷி வல்பொல ஆகியோர் அடங்குவர்.

இன்று காலை 08.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-131 இல் இந்தியாவின் திருச்சிக்கு 67 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த பெண் விமானிகள் மற்றும் பெண் ஊழியர்கள் இன்றிரவு 11.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-132 இல் 61 பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் திருச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...