அமெரிக்கா நண்பர்களை பார்க்க சென்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சோகம்

Date:

அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் எஸ்.சி. பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் கிழக்கு பென்சில்வேனியாவுக்கு தங்களது குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்காக சென்று உள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துள்ள நிலையில், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதில் அந்த குடும்பத்தினர் சிக்கி உள்ளனர். அவர்களில் தந்தை, 4 வயது மகன் மற்றும் பாட்டி தப்பியுள்ளனர். தாயார் உயிரிழந்து உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மொத்தம் 5 பேர் உயிரிழந்து உள்ளனர் என அப்பர் மேக்பீல்டு நகர காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் என தி ஹில் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

இதுதவிர, அந்த குடும்பத்தின் 2 வயது சிறுமி மற்றும் 9 மாத குழந்தையை பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்று காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று, வெள்ளத்தில் வரிசையாக சாலையில் நின்ற 11 கார்களில் 3 கார்கள் அடித்து செல்லப்பட்டு உள்ளன. இவர்களில் 10 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...