அமெரிக்கா, சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வருகின்றது.
இதற்கிடையே, இந்தோனேஷியாவின் பாலியில் கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் சீன பயணம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்க வான்வெளியில் சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்துக்கு பிறகு வெளியுறவுத்துறை அமைச்சரின் சீன பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக பீஜிங்க்கு விஜயம் செய்துள்ளார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவின் காங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.