ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11) நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சனையை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (12) காலை பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து துணை பொது மேலாளர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்தார்.
எனவே சிலாபம், கணேவத்தை, அளுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பல ரயில்கள் இன்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் இருந்து இயக்கப்படவிருந்த பல குறுகிய ரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.ரம்புக்கன, பொல்கஹவெல, கண்டி, மஹவ, குருநாகல், காலி, அவிசாவளை ஆகிய பகுதிகளில் இருந்து ரயில்கள் வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.