இரவு என்பதே இருக்காது! பேரழிவுகள் ஏற்படும்..பாபா வாங்காவின் அதிர வைக்கும் கணிப்புகள்

Date:

2024ஆம் ஆண்டில் உலகம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் என்பது உட்பட பாபா வாங்காவின் அதிர வைக்கும் கணிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் 2024ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் பரவின.

அதில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது நாட்டைச் சேர்ந்தவர்களாலேயே கொல்லப்படுவார் என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் 5079ஆம் ஆண்டு வரை என்ன சம்பவங்கள் நடைபெறும் என்று பாபா வாங்கா கணித்ததாக மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி 2024ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை உலகம் சந்திக்கும்.

புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படும். உலகின் மிகப்பெரிய நாடு ஒன்று உயிரியல் ஆயுதங்களை சோதனை செய்யும் என்று பாபா வாங்கா கணித்திருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் அடுத்த ஆண்டு பூகம்பம், வெள்ளம் என பேரழிவுகள் ஏற்படும் என்றும், 2028ஆம் ஆண்டு வெள்ளி கிரகத்திற்கு மனிதர்கள் செல்வார்கள் என்றும் அவர் கணித்து வைத்துள்ளாராம்.

அதேபோல் 2100 ஆண்டுக்கு பிறகு செயற்கை சூரியஒளி உருவாக்கப்பட்டு இரவு என்பதே பூமியில் இல்லாமல் போகுமாம்.

மேலும் 5079ஆம் ஆண்டுடன் ஒட்டுமொத்த உலகமும் அழிந்துவிடுமாம். பாபா வாங்கா ஆண்டுக்கு 6 கணிப்புகள் வீதம் ஒவ்வொரு ஆண்டுக்கும் கணிப்புகளை எழுதி வைத்துள்ளாராம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிசிசிஐ புறக்கணித்த நிலையில் கேஎல் ராகுல் குறித்து எல்எஸ்ஜி டுவிட் பதிவு

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20...

ஸ்டாயினிஸ் அதிரடி- மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...

மீண்டும் வருகிறது Nokia 3210

கடந்த 1999 ம் ஆண்டு Nokia 3210 மொபைல் போன் வெளியானது....

விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது – குரங்கு பெடல் டிரைலர்

சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து...