பாணந்துறை சொய்சா வீதியிலுள்ள வீடொன்றிற்குள் கூரிய ஆயுதத்துடன் நுழைந்த நபரொருவர், அங்கிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைத் தாக்கி படுகாயமடைய செய்துள்ளதாக பாணந்துறை தெற்குப் பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் ஆயுதத்துடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
திருமணத்திற்கு புறம்பான உறவின் அடிப்படையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.