கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் உள்நாட்டுக் கடனில் எந்தவிதமான குறைப்பும் இருக்காது!

Date:

முன்மொழியப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டில் உள்நாட்டுக் கடனில் எந்தவிதமான குறைப்பும் இருக்காது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு காரணமாக ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதிப் பயனாளிகள் அல்லது ஓய்வூதிய நிதிகளுக்கு எந்த அநீதியும் ஏற்படாது என்றும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் இந்த உறுதியை அளித்துள்ளார்.

உத்தேசித்துள்ளபடி உள்நாட்டுக் கடனை மறுசீரமைத்தால் நாடு பாரிய பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் உள்நாட்டுக் கடனைக் குறைக்க அரசாங்கம் உடன்பட்டிருந்தால், இந்த விடயத்தை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேட்டுக்கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...