கடற்றொழில் துறையில் முதலீடு செய்ய சீன முதலீட்டாளர்கள் விருப்பம்!

Date:

கடற்றொழில் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீனாவின் முதலீட்டாளர்கள் குழுவொன்று விருப்பம் தெரிவித்துள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பில் அவர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தமது படகுகளை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்களை இலங்கையிலிருந்து தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் குறித்த முதலீட்டாளர்கள் குழு விரும்பம் வெளியிட்டுள்ளது.

தமக்கான அனுமதிகளை கடற்றொழில் அமைச்சு வழங்குமாயின் கடற்றொழில்துறையில் பாரிய முதலீடுகளை செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த முதலீட்டாளர்களின் திட்டவரைபை ஆராய்ந்து பார்த்ததன் பின்னர் உரிய பதில்களை வழங்குவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...