கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (மார்ச் 26) பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் 16 வயதுடைய இளைஞன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கண்டி மடபோவல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவர் தனது கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டு பாதசாரிகள் பயணிக்கும் மேம்பாலத்தை பயன்படுத்தாமல் புகையிரத தண்டவாளத்தை கடந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவியின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.