பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகின்றது.
இதில் முதலாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அசத்தியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி கடந்த ஆட்டத்தை போல் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஓட்டங்களை எடுக்க தடுமாறியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப் 0 ஓட்டம் முகமது ஹாரிஸ் 15 ஓட்டம், அடுத்து வந்த ஷாபிக் 0 ஓட்டத்திலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய இமாத் வாசிம் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். இமாத் வாசிம் 64 ஓட்டம், ஷதாப் கான் 32 ஓட்டம் எடுத்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 133 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் களம் புகுந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 44 ஓட்டம், உஸ்மான் கானி 7 ஓட்டம், அடுத்து வந்த இப்ராகிம் ஜட்ரான் 38 ஓட்டம் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.
இறுதியில் அந்த அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 133 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது T20 போட்டி இன்று இரவு நடைபெறுகின்றது.