கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற குறித்த குழுவின் கூட்டத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் அவரது பெயரை முன்மொழிய பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன அதனை வழிமொழிந்தார்.
இந்தக் குழு பரந்துபட்ட ஒரு துறையை கொண்டுள்ளதால் உயர்கல்வி மற்றும் ஆய்வு பற்றிய உப குழு மற்றும் திறன் விருத்தி மற்றும் தொழிற் பயிற்சி பற்றிய உப குழு ஆகிய இரண்டு உப குழுக்களை நியமிக்க இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.