கழிவறையில் பிறந்த சிசு; குழந்தையை தூக்கி வீசிய தாய்

Date:

இந்தியாவின் கொல்கத்தாவில் கழிவறையில் தனது குழந்தையை பிரசவித்து குழந்தையின் அழுகையால் கோபம் அடைந்து, ஜன்னல் வழியாக தூக்கி வீசிய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவின் கஸ்பா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 22ஆம் திகதி தனது குழந்தையை பிரசவித்துள்ளார்.

அது தனது வீட்டின் கழிவறையில் யாருக்கும் தெரியாமல் நடந்துள்ளது.

பிறந்த தனது குழந்தை அழ ஆரம்பித்ததால், கழிவறையின் ஜன்னலை உடைத்து வெளியே வீசியுள்ளார்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு பதறி வந்து பார்த்த நிலையில் குழந்தையையும் தாயையும் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...