கிளிநொச்சியில் தீக்கிரையான தொழிற்சாலை!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் சக்திஅக்றோ தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (08) நண்பகல் வேளை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த தும்புத் தொழிற்சாலை  தீக்கிரையாகியுள்ளதுடன், தொழிற்சாலை வளாகத்திலுள்ள தென்னை மரங்களும், அருகிலுள்ள காணிகளில் உள்ள தென்னை மரங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர், கிராம சேவகர், கிராம மக்கள் ஆகியோரின் துணையுடன் தற்காலிகமாக குறித்த தீ அனர்த்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும், தீ கிராம குடியிருப்புகளுக்கு பரவாத வகையில் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும்,   தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...