கைதான தனது மனைவியை பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவன்

Date:

போதைப்பொருளுடன் கைதான தனது மனைவியை பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , கைதான மனைவியை பார்க்க வேண்டும் என பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற கணவன், மனைவி மீது பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.

 

உடனே சுதாகரித்துக்கொண்ட பொலிஸார் , கணவனின் தாக்குதலில் இருந்து மனைவியை காப்பாற்றியதுடன் , மனைவியை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து தாக்கிய குற்றச்சாட்டில் கணவனையும் கைது செய்தனர்.

 

போதைப்பொருடன் கைது செய்யப்பட்ட பெண் ,கணவனுக்கு தெரியாமல் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் , பெண்ணுக்கு போதைப்பொருளை விநியோகித்தவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...